×

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பேரையூர், நவ. 22: பேரையூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ளது சின்னாரெட்டிபட்டி. இந்த ஊரைச்சேர்ந்த அழகர்சாமி மகன் ராம்குமார்(25) நேற்று வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Plaintiff ,suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...